தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய பாதிப்புகள் சற்றும் குறையாததால் பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடம் படித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. பிளஸ் 2 வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்பினரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 27 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த சூழலில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.
ஓ, இதுக்குத் தான் ஜெயராமும், மகனும் ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்தார்களா?
வைரஸ் பரவல் முடிவுக்கு வரட்டும். அதன்பிறகு தங்களது பிள்ளைகளின் கல்வியை பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை மந்தமாக காணப்படுகிறது. விரைவில் 12ஆம் வகுப்பிற்கும் மாணவர் சேர்க்கையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் அடுத்த கல்வியாண்டும் வீட்டிலிருந்த படியே பாடம் படிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பமான நிலை நீடிக்கிறது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 27 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த சூழலில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.
ஓ, இதுக்குத் தான் ஜெயராமும், மகனும் ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்தார்களா?
வைரஸ் பரவல் முடிவுக்கு வரட்டும். அதன்பிறகு தங்களது பிள்ளைகளின் கல்வியை பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை மந்தமாக காணப்படுகிறது. விரைவில் 12ஆம் வகுப்பிற்கும் மாணவர் சேர்க்கையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் அடுத்த கல்வியாண்டும் வீட்டிலிருந்த படியே பாடம் படிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பமான நிலை நீடிக்கிறது.