ஆப்நகரம்

மீண்டும் எடப்பாடிக்கும் போட்டியாக களத்தில் குதிக்கும் டிடிவி தினகரன்

கட்சிப்பணியில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

TNN 31 Jul 2017, 11:53 am
கட்சிப்பணியில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil admk amma team general secretary ttv dinakaran call district members
மீண்டும் எடப்பாடிக்கும் போட்டியாக களத்தில் குதிக்கும் டிடிவி தினகரன்


இரட்டை சிலை சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். பின்னர், ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சிப் பணியை மீண்டும் தொடங்கயிருப்பதால், வரும் 5ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இரட்டை இலை தொடர்பான வழக்கில் கட்சிப் பணியை தொடர முடியாமல் இருந்த நிலையில், தற்போது எடப்பாடிக்கு போட்டியாக மீண்டும் கட்சிப்பணியை தொடர நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி