ஆப்நகரம்

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்ளாக முகமது ஜான், சந்திரசேகரன் அறிவிப்பு

ஜூலை 8ஆம் தேதி, நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். எனவே திங்கட்கிழமை முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.

Samayam Tamil 6 Jul 2019, 12:10 pm
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Samayam Tamil dfffg


முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அன்வர் ராஜா, கே.பி. முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோகிவிட்டது.

ஜூலை 8ஆம் தேதி, நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். எனவே திங்கட்கிழமை முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.

இத்துடன் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படும் முன்பே இவரே வேட்பாளராக அறிவிக்கப்ட்ட்டார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அடுத்த செய்தி