ஆப்நகரம்

இவங்க ரெண்டு பேரும் ஆட்சிக்கு வந்தால் பேரழிவு தான் - தமிழகம் குறித்து ஜிக்னேஷ் மேவானி பகீர்!

வரும் மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பேரழிவு தான் ஏற்படும் என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2019, 8:01 pm
குஜராத் மாநில எம்.எல்.ஏவாகவும், தலித் செயற்பாட்டாளராகவும் இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்தார்.
Samayam Tamil Jignesh Mevani


அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ் மேவானி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைமையால் அகில இந்திய அளவில் மோசமான சூழல் நிலவி வருகிறது.

இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று. இவர்கள் அனைவரும் மதவாத சக்திகள் ஆவர். எனவே பாஜக எதிர்ப்பு நிலைபாடு கொண்ட மதச்சார்பற்ற சக்திகள் அகில இந்திய அளவில் ஒன்று சேர வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டால் தான், இவர்களை வீழ்த்த முடியும். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத படி தோற்கடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.

ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வது குறித்து, யோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி