ஆப்நகரம்

சேலம், திருச்சியை மிஞ்சிய தாம்பரம்: திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கற்களை வீசி மோதல்

தாம்பரம் நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக-திமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

TNN 29 Feb 2016, 4:30 pm
தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக-திமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
Samayam Tamil admk dmk counsilors clash in tambaram municipality
சேலம், திருச்சியை மிஞ்சிய தாம்பரம்: திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கற்களை வீசி மோதல்


தாம்பரம் நகராட்சிக் கூட்டம் தலைவர் கரிகாலன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள், ஊழல் புகாரில் சிக்கியுள்ளதால் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு புதிய ஒப்பந்தங்களை ஒதுக்கக் கூடாது என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நகராட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் நகர்மன்றத்துக்கு வெளியில் நின்று கொண்டு நகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால், அவர்களுக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சிலருக்குக் காயம் ஏற்பட்டது, அதிமுக பிரமுகர் கோபியின் கார் கண்ணாடி உடைந்தது.

இந்த விவகாரம் குறித்து ஊர்வலமாகச் சென்று தாம்பரம் காவல் நிலையத்தில் திமுக உறுப்பினர்கள் புகார் அளித்தனர். முன்னதாக நடைபெற்ற சேலம், திருச்சி மாநகராட்சிக் கூட்டங்களில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி