ஆப்நகரம்

ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் : தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் தமிழக முதல்வர் அணிக்கு வழங்கபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNN 23 Nov 2017, 3:18 pm
இரட்டை இலை சின்னம் தமிழக முதல்வர் அணிக்கு வழங்கபடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil admk leaf symbol allotted to edappadi palanisamy and panneerselvam
ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் : தேர்தல் ஆணையம்


இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வியுடன் காத்திருக்கும் அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இரு பிரிவினரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகவுள்ளது.
இந்திலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணிக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி