ஆப்நகரம்

தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கு: தமிழக முதல்வர்

தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jan 2019, 1:44 pm
தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கு: தமிழக முதல்வர்
தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கு: தமிழக முதல்வர்


மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

’’அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. நானும் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கிராமத்திலேயே வளர்ந்தவர்கள். அதனால் கிராம மக்களின் பிரச்சனைகள் தெரியும். கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின், தற்போது ஊர் ஊராக செல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு இப்போது தான் கிராமத்தின் ஞாபகம் வந்திருக்கிறது.

தி.மு.கவில் ஒரு குடும்பத்தினர் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அதிமுகவில் மட்டும் தான் அடிமட்ட தொண்டர்களும் உயர்பதவிக்கு வர முடியும். திமுக தலைவராக கலைஞர் இருந்தார், தற்போது அவர் மகன் ஸ்டாலின் தலைவராக உள்ளார்.

அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும். துரோகம் இழைப்பவர்களுக்கு ஆதரவு தரமாட்டோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் அ.தி.மு.க அல்ல. உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பது தி.மு.க தான் .மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியது தி.மு.க தான்’’

இவ்வாறு அவர் கூறிள்ளார்.

அடுத்த செய்தி