ஆப்நகரம்

அன்னியன்களாக மாறிவரும் அதிமுகவினர்

சசிகலாவா ஓபிஎஸ்ஸா என போட்டி நடந்துவரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீரென அன்னியன்களாக மாறிவருகின்றனர்.

TOI Contributor 12 Feb 2017, 5:52 am
சென்னை : சசிகலாவா ஓபிஎஸ்ஸா என போட்டி நடந்துவரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீரென அன்னியன்களாக மாறிவருகின்றனர்.
Samayam Tamil admk members changed like anniyan
அன்னியன்களாக மாறிவரும் அதிமுகவினர்


ஓ பன்னீர் செல்வம் முதற்கொண்டு பல்வேறு அதிமுகவினர் அன்னியன்களாக மாறிவருகின்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் பதவியேற்றார் ஓபிஎஸ். தற்போது என் பதவியை கட்டாயப்படுத்தி பறித்தனர் என்ற குற்றச்சாட்டை சசிகலா மீது கூறிய பின் சசிகலா, ஓபிஎஸ் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு வைப்பதற்கு முன்வரை சசிகலாவை சின்னம்மா என அழைத்து வந்த ஓபிஎஸ் அவர் காலிலும் விழுந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கொடுத்த அதே கும்பிடு மரியாதை கொடுத்து வந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் திடீர் பேச்சால் மாறிப்போனது.

இதையடுத்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்த சில எம்.எல்.ஏக்களும், அதிமுகவினரும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வர தொடங்கியுள்ளனர்.



அம்மா இருந்த இடத்தில் சின்னம்மா தான் வரவேண்டும் என கூறிக்கொண்டிருந்த மாபா பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் திடீரென அன்னியன் விகரம் போல மாறி மாறி பேசி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

ஆறு எம்.எல்.ஏ.,க்கள்:
1.சோழவந்தான் - மாணிக்கம்
2. ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்
3. வாசுதேவ நல்லுார் - மனோகரன்
4. கவுண்டம்பாளையம் - ஆறுகுட்டி
5. ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன்
6. ஆவடி - மாபா பாண்டியராஜன் (பள்ளி கல்வித் துறை அமைச்சர்)

இதுவை 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள்:
* அ.தி.மு.க., அவை தலைவர் - மதுசூதனன்
* அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் - பொன்னையன்

அடுத்த செய்தி