ஆப்நகரம்

அதிமுக ஒன்றாகாவிட்டால் மூன்று தீமைகள்: திருமா எச்சரிக்கை

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுகவை பாதுகாப்பதே அக்கட்சியினரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

TNN 10 Aug 2017, 2:30 pm
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுகவை பாதுகாப்பதே அக்கட்சியினரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Samayam Tamil admk merger can avoid three dangers says thirumavalavan
அதிமுக ஒன்றாகாவிட்டால் மூன்று தீமைகள்: திருமா எச்சரிக்கை


அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இன்று கட்சியின் தலைமையகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில், டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுகவை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமித்ததே அதிமுக சட்டவிதிகளுக்கு எதிரானது என்றும் அதனை தொண்டர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை மட்டுமே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்றும் அசாதாரண சூழல் காரணமாக அவர் செயல்படாமல் போன நிலையில் கட்சியை பிளவுபடாமல் காக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தீர்மானத்தில் முதல் கையொப்பமிட்டுள்ளார். 27 பேர் இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சசிகலா மூலம் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் இதில் கையொப்பமிடவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுகவை பாதுகாப்பதே அக்கட்சியினரின் கடமை என்று வலிறுத்தினார். மேலும், அணிகள் இணையாவிட்டால் ஆட்சி கலைக்கப்படலாம். அப்படி நடந்தால் சாதி, மத சக்திகள் தலைதூக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகும் என்றும் திருமா எச்சரித்தார்.

அடுத்த செய்தி