ஆப்நகரம்

இணைப்புக்கு எங்கள் கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் கதவுகள் திறந்தே இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

TNN 4 Jul 2017, 11:29 am
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் கதவுகள் திறந்தே இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Samayam Tamil admk merger is like to be announced soon
இணைப்புக்கு எங்கள் கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் முதல்வர் பழனிச்சாமி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்ட பின்பும் இரு அணிகளும் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணைப்புக்கு எங்கள் பக்க கதவு திறந்தே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நேற்று இரவு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதனால் சில தினங்களில் அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மீண்டும் 7 பேர் கொண்ட குழு அமைத்து இறுதி பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைவராகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைத்தலைவராகவும் இக்குழுவில் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓ,பன்னீர்செல்வம் அணிக்கு அமைச்சரவையில் இரு பதவிகள் அளிக்கப்படலாம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பணியைத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி