ஆப்நகரம்

தெரு கோடியில் ஒருவர் தான் கமல்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

கமல் தெருகோடியில் ஒருவராகத்தான் இருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 7 Jun 2018, 2:51 pm
கமல் தெருகோடியில் ஒருவராகத்தான் இருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil jayakumar


தான் கோடியில் ஒருவன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு பிஆர்ஓ என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார், பைபர் படகிற்கான பதிவுச் சான்றிதழ்களை மீனவர்களுக்கு வழஙகினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

‘கமல் தன்னை கோடியில் ஒருவன் என்று கூறியுள்ளார். அவர் தெரு கோடியில் மட்டுமே ஒருவராக இருக்க முடியும். அவர் என்னை பிஆர்ஓ என்று சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே. பிஆர்ஓ என்றால் சும்மாவா. அது மிகப்பெரிய பொறுப்பு. நான் அவர் புகழை பரப்பிக்கொண்டு இருப்பேன்.

நீட் தேர்வை பொறுத்தவரையில், தமிழகத்துக்கு அது தேவையில்லை என்பது தான் தமிழக அரசினுடைய கருத்து. தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தான் அம்மாவின் அரசு செயல்படும். தமிழகம் மட்டுமில்லாமல் பிறமாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பினால் மாற்றம் ஏற்படும்.

கட்சி ரீதியாக மத்திய அரசுடன் எந்த இணக்கமும் இல்லை. தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் ஒத்துப்போக வேண்டும். அவ்வாறு ஒத்துப்போவது ஊதுகுழல் அல்ல, அது தமிழகத்தின் உரிமை குரல்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி