ஆப்நகரம்

'எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குக' - பேட்டி கொடுக்கும் போதே பஷீருக்கு வந்த பார்சல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி கொடுத்த அதிமுக நிர்வாகி பஷீர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

Samayam Tamil 28 Oct 2021, 4:50 pm
தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டம் வந்ததற்கு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான் என்றும் மக்களவை தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை தொடர் சரிவை அதிமுக கண்டதிற்கும் அவர்தான் காரணம் என்றும் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர் ஜெ.எம். பஷீர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil jm bashir


மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க வந்த பச்சை துரோகி என்றும் சிறுபாண்மையினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் பரபரப்பாக பேசியிருந்தார். இன்று பஷீர் பேசிக்கொண்டிருந்த வேளையிலேயே அதிமுக அவரை கட்சியை விட்டு நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஜெ.எம். பஷீர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

'அம்மா உணவகம்' திட்டத்தை திமுக நீர்த்துப்போகச் செய்கிறதா?


கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி