மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை செல்லவுள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
69 வயதாகும் ஏ.கே. போஸ் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் அவ்வப்போது முக்கிய கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
1972ம் ஆண்டு முதல் அதிமுக-வில் இருந்து வந்த ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலு போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே மரணம் அடைந்தார்.
இதன்காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்றார். மரணமடைந்த ஏ.கே. போஸிற்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிற்பகல் 1 மணியளவில் மதுரை சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
அதை தொடர்ந்து மாலை மதுரை ஜீவ நகரில் உள்ள ஏ.கே. போஸின் வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
69 வயதாகும் ஏ.கே. போஸ் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் அவ்வப்போது முக்கிய கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
1972ம் ஆண்டு முதல் அதிமுக-வில் இருந்து வந்த ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலு போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே மரணம் அடைந்தார்.
இதன்காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்றார். மரணமடைந்த ஏ.கே. போஸிற்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிற்பகல் 1 மணியளவில் மதுரை சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
அதை தொடர்ந்து மாலை மதுரை ஜீவ நகரில் உள்ள ஏ.கே. போஸின் வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.