அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரின் செல்ஃபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டு மன்னார்குடி கோஷ்டியால் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்குடி தொடங்கிய உடனேயே எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவே போயஸ் கார்டனுக்கு படை எடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உள்ளது என்ற அறிவிப்பை அடுத்து காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்களை பேருந்தில் சிறை வைத்ததாகவும் அவர்களிடம் இருந்த செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் யாருக்கும் செல்ஃபோனில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி வீட்டிற்கு பேச வேண்டுமானால் நான்கு பேர் முன்னிலையில் தான் பேச வேண்டும். ஒருவருக்கு நான்கு பேர் என்ற வீதம் பலத்த பாதுகாப்புடன் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு சென்னையைவிட்டு வெளியேறக்கூடாது என்று கூறியுள்ள கட்சித்தலைமை அவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்து கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்குடி தொடங்கிய உடனேயே எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவே போயஸ் கார்டனுக்கு படை எடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உள்ளது என்ற அறிவிப்பை அடுத்து காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்களை பேருந்தில் சிறை வைத்ததாகவும் அவர்களிடம் இருந்த செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் யாருக்கும் செல்ஃபோனில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி வீட்டிற்கு பேச வேண்டுமானால் நான்கு பேர் முன்னிலையில் தான் பேச வேண்டும். ஒருவருக்கு நான்கு பேர் என்ற வீதம் பலத்த பாதுகாப்புடன் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு சென்னையைவிட்டு வெளியேறக்கூடாது என்று கூறியுள்ள கட்சித்தலைமை அவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்து கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.