ஆப்நகரம்

ரெசார்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்எல்ஏக்கள்!

ரெசார்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்எல்ஏக்கள்!

TOI Contributor 10 Feb 2017, 4:41 pm
சசிகலா தரப்பினரால் ரெசார்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களில் சிலர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ரகசிய செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil admk mlas those who stayed in resort sent message to o panneer selvam
ரெசார்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்எல்ஏக்கள்!




இதனையடுத்து தற்போது பன்னீர் செல்வத்தின் பலம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெசார்டில் தங்கியிருப்பவர்களில் 7 எம்எல்ஏக்கள் தூதுவிட்டிருப்பதாகவும், அப்படி இருக்கும் பட்சத்தில் பன்னீர் செல்வத்தின் பலம் 13 ஆக உயரக்கூடும் என்று தெரிகிறது. தமிழக அரசியல் சதுரங்கத்தில் பரபரப்பான காட்சிகளே தினம் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டியால் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பெரும் மனக்கஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பேசியவர்கள், சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே எங்களின் பலம் அதிகரித்துவிடும் என்றனர். ஆனால் மன்னார்குடி குடும்பம் தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் அவர்களை வைத்துள்ளது. அங்குள்ள 7 எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் எங்களின் பலம் 13ஆக உயரும் என்றார். ஆனால் சசிகலா தரப்பினர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சின்னம்மா தான் சொல்லிவருகின்றனர்.

இதற்கிடையில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ சுதாவை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு தொடர்பாக காவல்துறை, அதிமுக கட்சித்தலைமை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித நேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இன்று தனது ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க இருக்கிறார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மக்கள் மத்தியிலும், எம்எல்ஏக்கள் மத்தியிலும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அடுத்த செய்தி