ஆப்நகரம்

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.பி., புகார்!

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2018, 3:45 pm
சென்னை: எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil 10


சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண்மொழிதேவன் கூறுகையில், ‘ ஒரு சதுர அடி கோவில் நிலத்தை தான் ஆக்கிரமித்திருப்பதாக, எச்.ராஜா நிரூபித்தால், அரசியல் விட்டு விலக தயார், என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் கூறினார்.

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் அளித்துள்ள புகாரில், ‘ தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில், எச்.ராஜாவின் செயல்பாடுகள் உள்ளதாகவும், அவரின் நோக்கம் கலவரம் செய்து அரசியல் செய்ய வேண்டும், என்பது தான் என்றும் குறிப்பிட்டார்.

தவிர தன்னைப்பற்றி தவறான தகவலை அவர் பரப்புகிறார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை அவர் நிரூபித்தால், அரசியலே விட்டே விலகத் தயார் என்றும் அருண்மொழிதேவன் கூறினார்.

அடுத்த செய்தி