ஆப்நகரம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான தம்பிதுரை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Samayam Tamil 22 Jan 2019, 11:34 am
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Samayam Tamil deputy-speaker_story-647_030317074100


ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையின் பெயரில், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையத்தில் அரசு அதிகாரிகள் தொடங்கி ஜெயலலிதா வீட்டு பணியாளா்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 6 மணிநேரம் அவரிடத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்தபிறகு செய்தியார்களிடம் பேசிய அமைச்சர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அதிமுக எம்பி தம்பிதுரை இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.

அடுத்த செய்தி