ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு: பிரதமருடன் அதிமுக எம்பி-க்கள் நாளை சந்திப்பு

ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியை அதிமுக எம்பி-க்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.

TNN 10 Jan 2017, 4:36 pm
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியை அதிமுக எம்பி-க்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.
Samayam Tamil admk mps likely to meet pm modi tomorrow about jallikattu issue
ஜல்லிக்கட்டு: பிரதமருடன் அதிமுக எம்பி-க்கள் நாளை சந்திப்பு


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்ற ஆண்டு கூட எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்த பலனும் இல்லை.

அதேசமயம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என ஆதரவுக் குரல்கள் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை, நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை சந்திக்கவுள்ளனர். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் பொருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் பிரதமரை வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADMK MP's likely to meet PM Modi tomorrow about Jallikattu issue

அடுத்த செய்தி