ஆப்நகரம்

’உளறல் நாயகன் காமஹாசன்...’ கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த நமது அம்மா

நாதுராம் கோட்சேதான் முதல் இந்து தீவிரவாதி என்று பேசிய கமல்ஹாசனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் நமது அம்மா நாளேட்டில் கட்டுரை வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 11:25 am
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கடந்த 12ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார்.
Samayam Tamil கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து நமது அம்மா கட்டுரை
கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து நமது அம்மா கட்டுரை


கமலின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தொிவித்து வருகின்றன. மேலும் கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர, தேர்தல் ஆணையத்தில் கமலின் பிரச்சாரத்திற்கு தடைக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனின் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக-வின் நமது அம்மா நாளேடு கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. கமலை மோசமாக வசைபாடியது மட்டுமில்லாமல், மகள் ஸ்ருதிக்கு அவர் முத்தம் தரும் புகைப்படத்துடன் கட்டுரையில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிகாளைக்கு புரியுமோ புனிதமிக்க இந்து தரம்ம என்று தலைப்பிட்டு, கமல்ஹாசனை ’காமஹாசன்’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. அவரை ’உளறல் நாயகன்’... ‘பைத்தியக்காரன்’... ’சண்டாளன்’... ‘மனநோயாளி’... என்று குறிப்பிட்டு மிகவும் தரங்கெட்ட வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஒரு படத்தில் கடவுளை விமர்சிப்பது. மற்றொரு படத்தில் சைவத்திற்கும் வைனவத்திற்கு இடையே சண்டையை மூட்டி விடுவது. ஒரு படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பது என்று கமல்ஹாசன் மக்களிடயே சிண்டு முடிந்தே பிழைப்பை ஓட்ட நினைப்பதாக நமது அம்மா நாளேடு குறிப்பிட்டுள்ளது.

இறுதியில் இந்து மதத்தின் உன்னதம் பொறுப்பற்று அலையும் பொலிகாளைகளுக்குப் புரியாது. தமிழகத்தை சுற்றிக்க்கொண்டிருக்கும் வில்லன் உடனே தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பேசுவதற்கு கூசும் வகையிலான வார்த்தைகள் விமர்சனக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

அடுத்த செய்தி