ஆப்நகரம்

வேலூர் மக்களவை தேர்தலை நடத்த கோரி குடியரசு தலைவருக்கு மனு!

நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை நடத்த கோரி, அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சினர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Samayam Tamil 30 Apr 2019, 1:43 pm
நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை நடத்த கோரி, அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சினர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Samayam Tamil வேலூர் மக்களவை தேர்தலை நடத்த கோரி குடியரசு தலைவருக்கு மனு!
வேலூர் மக்களவை தேர்தலை நடத்த கோரி குடியரசு தலைவருக்கு மனு!


புதிய நீதிக்கட்சியின் தலைவரும், வேலூர் அதிமுக கூட்டணியின் வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது; வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. ஒரு நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பை இந்த தொகுதி மக்கள் பெற முடியாமல் போனது. 7 ஆம் கட்டத்தேர்தலோடு வேலூர் தேர்தலை நடத்த வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் காலதாமதம் ஆகும் போல் தோன்றுகிறது.

எனவே அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் வேலூர் தேர்தலை நடத்த இந்திய குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளோம். விரைவில் தேர்தல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் அதே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தோடு, தேர்தலை நடத்தினால் சந்திக்க அதிமுக கூட்டணி தயாராக இருக்கிறது. தபால் வாக்குகள் போடப்பட்ட நிலையில் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது மக்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்க சென்றார். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் ரத்து செய்யபட்டாலும் அதிமுக கூட்டணி கட்சியினர் மீண்டும் தேர்தல் பணிகளை துவங்கவுள்ளோம் என்று கூறினார்

அமைச்சர் வீரமணி கூறுகையில்; நடைபெறவுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக எளிதில் வெற்றி பெறும். வேலூர் பாராளுமன்ற தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை நடத்தினால் உடனே வெற்றி பெறுவோம் என்று கூறினார். பேட்டியின் போது பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி