ஆப்நகரம்

பற்றி எரியும் அதிமுக கோஷ்டி பூசல்கள்; போஸ்டர்களை கிழித்து அடாவடி!

அதிமுகவிற்கு நிகழும் கோஷ்டி பூசல்களால், போஸ்டர் கிழிசல்களில் வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 20 May 2018, 2:29 pm
சென்னை: அதிமுகவிற்கு நிகழும் கோஷ்டி பூசல்களால், போஸ்டர் கிழிசல்களில் வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil ADMK Posters


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தன. இதையடுத்து பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அணிகள் இணைந்தன. இருப்பினும் மனங்கள் இணையவில்லை என்று கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த போது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் ஜி.ராமச்சந்திரன். ஓபிஎஸ் பிரிந்து சென்ற போது, அவருடன் ராமச்சந்திரனும் சென்றார். அப்போது தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அணிகள் ஒன்றிணைந்தன. அப்போது ஜெயலலிதாவால் கட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த பொறுப்புகளில் தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக நாளிதழில் இடம்பெற்றுள்ள விளம்பரத்தில் அதிமுக கழக தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐடி பிரிவில் நீடிக்கும் கோஷ்டி பூசலைக் காட்டுகிறது. இந்த போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், பல முறை அழைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட மறுத்து, கட்சியின் நாளிதழில் இப்படி தலைமையை மீறி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மாநில செயலாளர் என அறிவிக்கிறார்கள்.

எனக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாததால் கேட்பாரில்லாத குழந்தை போல், அனாதை போல் தோன்றுகிறது. அம்மாவின் ஆன்மாவே காப்பாற்றவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADMK party problems raise day by day.

அடுத்த செய்தி