ஆப்நகரம்

திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம்- முதல்வர் பழனிசாமி

திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 6:06 am
திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil Tamil-image
திமுகவுக்கு எதிராக அதிமுக கண்டன ஆர்பாட்டம்- முதல்வர்


ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, இந்திய அரசு தங்களுக்கு உதவியதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இலங்கை ஈழப் போரில் அப்பாவி தமிழர்களின் படுகொலைக்கு திமுகவும், காங்கிரசும் காரணம். எனவே, இந்த படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 25-ஆம் தேதி திமுகவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி