ஆப்நகரம்

அதிமுக ஆட்சி நீடிக்க டிடிவி தரப்பை அழைத்து பேச வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்...!

டிடிவி தரப்பினர் கருத்தை கேட்க முதல்வர், துணை முதல்வர் முன்வர வேண்டும் என்று எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

TNN 24 Aug 2017, 1:00 pm
பெருந்துறை: டிடிவி தரப்பினர் கருத்தை கேட்க முதல்வர், துணை முதல்வர் முன்வர வேண்டும் என்று எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil admk rule should be fruitful says thoppu venkatachalam
அதிமுக ஆட்சி நீடிக்க டிடிவி தரப்பை அழைத்து பேச வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்...!


அதிமுகவிற்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரிவினை, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைவால் ஓரளவு சாந்தமடைந்தது. ஆனால் டிடிவி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர், ஆளுநரிடம் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறும் மனுவை அளித்தனர்.

இதனால் ஆட்சிக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், அவருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மேலும் டிடிவி அணியில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 19 பேரை முதலமைச்சர் பழனிச்சாமி அழைத்து பேச வேண்டும். நான் அதிமுகவில் தான் இருக்கிறேன்; தனி அணியில் இல்லை. டிடிவி தினகரனையும் முதல்வர், துணை முதல்வர் பேச வேண்டும்.

அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது மற்றும் தொண்டர்களின் எண்ணம். பிளவுபட்ட அணியினர் விரைவில் இணைவார்கள்; ஆட்சி தொடரும் என நம்புகிறேன்.

மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களின் கருத்துக்களையும் முதல்வர், துணை முதல்வர் அழைத்து கேட்க வேண்டும். ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆளுநரிடம் மனு அளிக்க செல்லவில்லை என்று தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

ADMK rule should be fruitful says Thoppu Venkatachalam.

அடுத்த செய்தி