ஆப்நகரம்

சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக, தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 16 Apr 2017, 10:56 am
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக, தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil admk supremo sasikala husband natarajan is in severe medical treatment
சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை


நடராஜனுக்கு, சில நாட்கள் முன்பாக, உடல் சோர்வு, அசதி காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெறும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், நடராஜன் அப்போலா மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார்.

அங்குள்ள எல் பிளாக்கில் சிகிச்சைபெற்றுவந்த அவருக்கு, சென்னை குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தியை கேட்டதும், நடராஜன் பலத்த அதிர்ச்சியடைந்தார்.

ஏற்கனவே, சசிகலா சிறையில் இருப்பதாலும், நடராஜன் சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது உடல்நிலை மோசமானது. தற்போது அவரது கல்லீரல் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அறுவை சிகிச்சை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்சமயம், நடராஜனுக்கு வீட்டிலேயே மருத்துவர்கள் குழு ஒன்று தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனால், அவர் மகாதேவனின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilnadu: Sasikala husband Natarajan is in critical position.

அடுத்த செய்தி