ஆப்நகரம்

ஓபிஎஸ் அணி மீண்டும் சசிகலா அணியிடம் சேர்ந்தால் என்ன ஆகும்?

மக்களை ஓய்வில்லாமல் செய்தி படிக்க வைத்த விவகாரம், அதிமுக.,விலிருந்து ஓபிஎஸ் பிரிந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டு மக்களை கதிகலங்க வைத்தன.

TOI Contributor 17 Apr 2017, 2:59 pm
சென்னை : மக்களை ஓய்வில்லாமல் செய்தி படிக்க வைத்த விவகாரம், அதிமுக.,விலிருந்து ஓபிஎஸ் பிரிந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டு மக்களை கதிகலங்க வைத்தன.
Samayam Tamil admk teams likely to reunite
ஓபிஎஸ் அணி மீண்டும் சசிகலா அணியிடம் சேர்ந்தால் என்ன ஆகும்?


இப்படி அதிமுக பிரிந்த பின் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க, 'அம்மா அணி' எனவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க, 'புரட்சித்தலைவி அம்மா அணி' எனவும் இரண்டாக செயல்பட்டு வருகின்றன.

ஆர் கே நகர் இடைத் தேர்தலுக்காக தினகரன் அணி சார்பாக 89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



தற்போது, இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைக்க பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மீண்டும் ஓபிஎஸ், சசிகலா அணி இணையுமா?

இந்நிலையில் அதிமுக.,வை இணைக்க,சசிகலா அணியுடன் இணைய அழைத்தால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தாயர் என தெரிவித்துள்ளார்.



அப்படி சசிகலா அணியுடன், ஓபிஎஸ் அணி இணைந்தால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்த ஓபிஎஸ் மீண்டும் அமைதியாகிவிடுவார்.

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

சசிகலா குறித்து எழுப்பப்பட்ட அனைத்து புகார்களையும், அடியோடு மக்களிடமிருந்து அகற்ற ஓபிஎஸ் முன்னின்று செயல்பட வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி