ஆப்நகரம்

சசிகலா அதிமுக-வை கைப்பற்றினால் அமமுக உடன் இணைப்போம்: டிடிவி தினகரன்

சென்னை: சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அக்கட்சியை இணைப்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Apr 2019, 9:36 pm
சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அக்கட்சியை இணைப்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Samayam Tamil அமமுக உடன் அதிமுக-வை இணைப்போம்: டிடிவி தினகரன் திட்டவட்டம்
அமமுக உடன் அதிமுக-வை இணைப்போம்: டிடிவி தினகரன் திட்டவட்டம்


அமமுக-வின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அசோக் நகரில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிகலாவிடம் ஆலோசனை செய்த பிறகே தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அக்கட்சியை அமமுக உடன் இணைப்போம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம்.

மமுக துணைத்தலைவராக அவைத்தலைவரான நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி