ஆப்நகரம்

பொங்கல்: வெல்லத்திலும் கலப்படம், மக்களே உஷார்!

பொங்கலுக்கு தரமான வெல்லத்தை வாங்கி உபயோகிக்க உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jan 2020, 9:38 am
மத வேறுபாடு கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடும் பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அடுத்த வாரம்தான் பொங்கல் என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
Samayam Tamil வெல்லத்திலும் கலப்படம்


வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து பலர் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் கொண்டாடப்படவேண்டும் என்பதற்காக உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை நடத்திவருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்: மாவட்டங்கள், ஒன்றியங்களைக் கைப்பற்றப் போவது யார்?

பொங்கலுக்குத் தேவையான முக்கிய உணவுப்பொருளான வெல்லம் அதிகளவில் விற்பனையாகும் இந்த நேரத்தில் கலப்பட வெல்லமும் பல இடங்களில் விற்பனையாவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகர்ப் பகுதிகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை சார்பாக கலப்பட வெல்லம் விற்பனை செய்யப்படுகிறதா என்று 23 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டது. அதில் இரண்டு மளிகை மொத்த விற்பனையாளர் கடையில் சுமார் 2 ஆயிரத்து 427 கிலோ கலப்பட வெல்லம் இருந்தது கண்டறியபட்டது.

வாட்டி எடுத்த வறுமை.. குழந்தைகளின் பசியை போக்க தலை முடியை விற்ற தாய்..!

அந்த கலப்பட வெல்லத்தை பிணைய பத்திரம் போடப்பட்டு அதன் விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டு உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழக அரசியலில் வெற்றிடம் எல்லாம் இல்லை: ஒரே போடு போட்ட கமல்!!

பொதுமக்கள், உணவு வணிகர்கள் கலப்பட வெல்லத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது தரமான, பாதுகாப்பான நல்ல வெல்லத்தையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி