ஆப்நகரம்

ஆஞ்சநேயர் கோயில் கல்கண்டில் கலப்படம் ? : பக்தர்கள் அதிர்ச்சி

பொன்னமராவதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் கற்கண்டில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 15 Feb 2020, 12:54 am
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் கல்கண்டில் கலப்படம் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
Samayam Tamil ஆஞ்சநேயர் கோயில் கல்கண்டில்  கலப்படம்


வேகுப்பட்டியில் உள்ள இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கல்கண்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலின் குருக்கள் ஒருவர் சிறிய உருண்டை வடிவிலான பிளாஸ்டிக் பொருள் கல்கண்டில் கலக்கப்பட்டுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

பொங்கல்: வெல்லத்திலும் கலப்படம், மக்களே உஷார்!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கோவிலுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் கல்கண்டுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் கலப்படம் உறுதி செய்யப்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் தயாரிக்கப்பட்ட தரமற்ற வெண்ணெய் மற்றும் நெய் பறிமுதல்.! உஷார் மக்களே

லாரந்தோறும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அன்றைய தினம் வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும்பாலும் துளசி பிரசாரமாக வழங்கப்படும்.

துளசியுடன் கற்கண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயில் கற்கண்டில் கலப்படம் உள்ளதாக எழுந்துள்ள் புகார் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி