ஆப்நகரம்

வன்முறையில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய மனு

சென்னையில் நேற்று கலவரத்தின் போது வன்முறசியில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்க்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNN 24 Jan 2017, 3:05 pm
சென்னை : சென்னையில் நேற்று கலவரத்தின் போது வன்முறசியில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்க்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil advocate balu filed a case angainst police atrocity in chennai hc
வன்முறையில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய மனு


சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தில் போலீசார் தீடீரென வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் சென்னையின் முக்கிய நகரங்களான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை , வடப்பழினி ஆகியவற்றில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போலீசார் சிலர் ஆட்டோ , குடிசைகளுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது. மேலும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

இந்தநிலையில் போலீசார் வன்முறையில் ஈடுப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற இருக்கிறது.

அடுத்த செய்தி