ஆப்நகரம்

“22ஆம் தேதிக்கு பின்னர் ஒட்டுமொத்த அதிமுகவும் என் பக்கம் தான்” : ஓபிஎஸ் நம்பிக்கை!

“22ஆம் தேதிக்கு பின்னர் ஒட்டுமொத்த அதிமுகவும் என் பக்கம் தான்” : ஓபிஎஸ் நம்பிக்கை!

TOI Contributor 20 Mar 2017, 3:31 pm
சென்னை : அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்றும், அதற்கு பின்னர் எடப்பாடி முதல் அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்கள் அணியில் இருப்பார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil after 22nd march whole admk party will be in my side says ops
“22ஆம் தேதிக்கு பின்னர் ஒட்டுமொத்த அதிமுகவும் என் பக்கம் தான்” : ஓபிஎஸ் நம்பிக்கை!


அதிமுகவின் கட்சி சின்னம் இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவு செய்ய ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணியை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைந்த நாளில் இருந்தே மத்திய அரசு ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. அதனால் இந்த இரட்டை இலை சின்னம் விவகாரத்திலும் உதவி கிடைக்கும் என்று ஓபிஎஸ் அணி நம்பிக்கையுடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் விதிகள் அனைத்தும் தங்களுக்கு தான் சாதகமாக உள்ளது என்றும், அந்த விதிகளை பின்பற்றும் போது சசிகலாவின் நியமனம் கேள்விக்குள்ளாகும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தெரிவிக்கின்றனர்.

அதிமுக தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி ஓபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதே போல் சசிகலா அணியும், அதிமுக நிர்வாகிகளின் ஆதரவுடன் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. இதனால் இரண்டு தரப்பினரும் நேரில் அழைக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் வெற்றி நமக்கு தான் என்று நம்பிக்கை கொண்டுள்ள ஓபிஎஸ், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்ய தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி