ஆப்நகரம்

63 ஆண்டுகளுக்கு பின் பெய்த கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 63 ஆண்டுகளுக்கு பின் அதிக அளவு மழை பெய்துள்ளது.

Samayam Tamil 15 Mar 2018, 9:59 am
தூத்துக்குடி மாவட்டத்தில் 63 ஆண்டுகளுக்கு பின் அதிக அளவு மழை பெய்துள்ளது.
Samayam Tamil after 63 years historic rain record in thoothukudi
63 ஆண்டுகளுக்கு பின் பெய்த கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 200 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த 63 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிக மழை இதுவாகும். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் ‘மூன்றாம் எண்’ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது.

கடந்த 1995 டிசம்பர் மாதம் தூத்துகுடியில் 188 மி.மீ மழை பெய்தது. தற்போது 200.8 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இரவு 2 மணியிலிருந்து காலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் மழை நீா் சூழ்ந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் சராசரியாக 55.83 மி.மீமழை பதிவானது. திருச்செந்துாரில் 82 மி.மீ, குலசேகரபட்டினத்தில் 14 மி.மீ, காயல்பட்டணத்தில் 142 மி.மீ, விளாத்திகுளத்தில் 40 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 95 மி.மீ பதிவாகியுள்ளது.

கனமழையால் காலை 7:30 மணிக்கு கிளம்ப வேண்டிய குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் கழித்து கிளம்பியது. நெல்லை பயணிகள் ரயில், மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாயின. கோவையில் இருந்து துாத்துக்குடி வரும் கோவை லிங்க் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தூத்துக்குடிக்கு முன் மேலுாரில் நிறுத்தப்பட்டன.

மழையால் 22 ஏக்கர் உப்பளங்கள் நீரில் முழுமையாக மூழ்கின. மேலும் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆனால் பொதுத்தேர்வுகள் மற்றும் நடைபெற்றது.

அடுத்த செய்தி