ஆப்நகரம்

சசிகலா சொல்லும் இரு மெசேஜ்: ஜெயலலிதா காரில் பயணம்!

சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த நிலையில் ஜெயலலிதா காரில் அதிமுக கொடியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 31 Jan 2021, 1:20 pm
சசிகலா கொரோனாவிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த நொடியிலிருந்தே அரசியல் அரங்கம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil sasikala in jayalaithaa car


மருத்துவமனையிலிருந்து இன்று வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவோ, தனது கருத்துகளை தெரிவிக்கவோ இல்லை. ஆனால் அவர் ஒரு பெரிய அரசியல் செய்தியோடுதான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் சசிகலா புகைப்படம் வெளியானது. 66 வயதான சசிகலாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினை இருக்கும் போது எப்படி அரசியலில் பரபரப்பாக இயங்க முடியும் என ஒரு சாரார் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு - மேலும் எதற்கெல்லாம் அனுமதி?
இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது சிறிது தூரம் சக்கர நாற்காலியில் வந்த அவர் பின் தாமாக படிகளில் நடந்துவந்து காரில் ஏறினார். இதன்மூலம் தான் குணமடைந்து வருகிறேன், விரைவில் முன்புபோல் இயங்குவேன் என்று சசிகலா சொல்லாமல் சொல்வதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
முத்தரையர் மாநாட்டில் எடப்பாடி: எல்லாம் அரசியல் கணக்கு தான்!
அதேபோல் அவருக்கு எதிராக அரசியல் செய்பவர்களுக்கும் சசிகலா ஒரு மெசேஜ் சொல்லியுள்ளார். சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை கூறிவருகின்றனர். ஆனால் சசிகலாவோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

அரசியல் திருப்பங்கள் இன்று: ஒரே நாளில் இத்தனையா, தாங்குமா அதிமுக?

அத்துடன் அதிமுகவின் கொடி பறக்க அவரது வாகனம் பெங்களூர் வீதிகளில் செல்கிறது. சசிகலா அதிமுகவிலேயே இல்லை எனக் கூறுபவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. வரும் நாள்களில் இந்த அரசியல் ஆட்டம் உச்சகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி