ஆப்நகரம்

தீபாவளி முடிந்து ஒரே நாளில் சென்னை திரும்பிய 2.13 லட்சம் பயணிகள்!

தீபாவளியை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து ஒரே நாளில் மட்டும் 2.13 லட்சம் பயணிகள் சென்னை திரும்பியுள்ளனர்.

Samayam Tamil 10 Nov 2018, 4:25 pm
தீபாவளியை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து அரசுப்பேருந்துகளின் மூலம், சுமார் 2.13 லட்சம் பயணிகள் ஒரே நாளில் சென்னை திரும்பியுள்ளனர்.
Samayam Tamil cats
தீபாவளி முடிந்து ஒரே நாளில் சென்னை திரும்பிய 2.13 லட்சம் பயணிகள்!


தீபாவளியை அடுத்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 4,207 சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 10-ம் தேதி வரை இயக்கப்பட்டன. இதில் புதன்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 1,388 சிறப்புப் பேருந்துகளை இணைத்து 3,663 பேருந்துகள் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டன.

குறிப்பாக நவம்பர் 7 பிற்பகலில் தொடங்கி, அடுத்த 24 மணி நேரத்துக்குள் சுமார் 2.13 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகள் மூலம் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

வியாழக்கிழமை 887 சிறப்பு பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 765 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி முதல் சனிக்கிழமை வரை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 96 ஆயிரத்து 139 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதன் மூலம் ரூ.4.49 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் மூலம் சனிக்கிழமை வரை,சென்னையிலிருந்து 3.22 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருப்பதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் தீபாவளியையொட்டி 7.25 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி