ஆப்நகரம்

அச்சச்சோ தியேட்டர்லேயுமா? முட்டை, பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி மயக்கம்

தியேட்டரில் முட்டை, பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

TNN 10 Jun 2017, 10:48 am
தியேட்டரில் முட்டை, பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil after plastic rice there is a plastic egg and puffs in tiruvallur
அச்சச்சோ தியேட்டர்லேயுமா? முட்டை, பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி மயக்கம்


திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் அஜித் மற்றும் சூர்யா. இருவரும், மணவால நகரில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இடைவேளையின் போது கேன்டீனில் இருந்து முட்டை மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில், இருவரும் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து படம் பார்க்க வந்தவர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் முத்துக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, பிளாஸ்டிக் முட்டை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி