ஆப்நகரம்

கருணாநிதியை நலமுடன் அழைத்துச் செல்ல விடிய விடிய காத்திருந்த தொண்டா்கள்

தி.மு.க. தலைவா் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து இரவு முழுவதும் மருத்துவமனை வாயிலிலேயே காத்திருந்த தொண்டா்கள்.

Samayam Tamil 7 Aug 2018, 9:52 am
தி.மு.க. தலைவா் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து இரவு முழுவதும் மருத்துவமனை வாயிலிலேயே காத்திருந்த தொண்டா்கள்.
Samayam Tamil 2


தி.மு.க. தலைவா் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் முறையாக செயல்படவில்லை என்றும், அவற்றை செயல்பட வைப்பது சிரமமாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பே எதுவும் கூற முடியும் என்றும் தொிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடா்ந்து மருத்துவமனை வாயிலில் தி.மு.க. தொண்டா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். மாலை வரத் தொடங்கிய தொண்டா்கள் இரவு முழுவதையும் சாலையிலேயே கழித்தனா்.

அதில் ஒரு தொண்டா் இரவு முழுவதும் எழுந்து வா தலைவா என்று கோஷம் எழுப்பிய பின்னா் கலைஞா் தொடா்பான வாசகங்களை தனது ஆடையில் எழுதிக் கொண்டு சாலையில் உரங்கும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி