ஆப்நகரம்

“வாடிவாசல், நெடுவாசலை அடுத்து எங்களை காக்கவும் மாணவர்கள் வரவேண்டும்” : தமிழக மீனவர்கள் கோரிக்கை!

“வாடிவாசல், நெடுவாசலை அடுத்து எங்களை காக்கவும் மாணவர்கள் வரவேண்டும்” : தமிழக மீனவர்கள் கோரிக்கை!

TOI Contributor 7 Mar 2017, 4:11 pm
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களை காக்க, வாடிவாசல் மற்றும் நெடுவாசலில் போராடியது போல் மீனவர்களுக்காக போராடவும் மாணவர்கள் முன்வரவேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil after vaadivasal and neduvasal students should support us says tn fisherman people
“வாடிவாசல், நெடுவாசலை அடுத்து எங்களை காக்கவும் மாணவர்கள் வரவேண்டும்” : தமிழக மீனவர்கள் கோரிக்கை!


இந்தியாவில் மாணவர் போராட்டம் என்றாலே ஜல்லிக்கட்டு போராட்டத்தை தான் உதாரணமாக சொல்ல முடியும். அந்த அளவிற்கு மாணவர்களால் தொடங்கப்பட்ட சிறிய அளவிளான போராட்டம் உலகம் முழுதும் பரவியது. சென்னை மெரினா, மதுரை வாடிவாசல், திருச்சி, நெல்லை, கோவை வ.உ.சி மைதானம் என்று நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு மாணவர்கள் போராட்டம் வெற்றியும் பெற்றது.

அதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து அங்கும் போராட்டம் வெடித்தது. கிராம மக்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டதை அடுத்த போராட்டம் தீவிரம் அடைந்தது. கடந்த 20 நாட்களாக நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட மீத்தேன் திட்டத்தை வேறு வடிவத்தில் மத்திய அரசு உள்ளே கொண்டு வருகிறது என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இலங்கை கடற்படையால் 22 வயது மீனவர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை சிறை பிடிப்பது, படகுகளை கைப்பற்றிச்செல்வது என்று இருந்த இலங்கை கடற்படை மீனவர் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையையும், மத்திய அரசையும் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும், வாடி வாசல், நெடுவாசலில் போராடியது போன்று மீனவர்களுக்காகவும் தமிழக மாணவர்கள் போராட வரவேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து வெற்றி காண்பார்கள் என்றும் மீனவர்கள் நம்புகின்றனர்.

அடுத்த செய்தி