ஆப்நகரம்

ஓட்டு போட்டால் துட்டு - என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

வழக்கமாக பரிசு பெறுவதை விட இம்முறை உள்ளாட்சி தேர்தலுக்கு பின் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Dec 2019, 10:08 am
தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடைபெறுகிறது. மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் ஜனவரி 11ஆம் தேதி நடக்கிறது.
Samayam Tamil Vijayabhaskar M R


இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

போலீஸ் தடை; நீதிமன்றம் கெடுபிடி- பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான திமுக!

இதனால் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் மாநில அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசு ரூ.1,000 ரொக்கம் மற்றும் இதர பொருட்கள் வழங்குவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொங்கல் பரிசு வழங்க தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பெண்கள் "சைட்" அடிக்கவே மாணவர்கள் போராட்டம் : ஒய்.ஜி.மகேந்திரனின் அபார கண்டுபிடிப்பு!!

ஆனால் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் கரூர் ஊரகப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பேசுகையில், கடந்த பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டன.

குடியுரிமை சட்டம்: திமுக பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி -உயர் நீதிமன்றம் அதிரடி!!

இதேபோன்று நடப்பாண்டிலும் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்ததால் தற்போது பொங்கல் பரிசு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக பொங்கல் பரிசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவீர்கள். நடப்பாண்டில் ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு பல்வேறு விதங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி