உள்ளாட்சி தேர்தலில் மாணவ அமைப்புகள் போட்டியிட இருப்பதாகவும், அதற்கான கூட்டம் மெரினாவில் கூட இருப்பதாகவும் வெளியான தகவலால் மெரினாவில் திடீரென பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும், சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் அமைதி வழியிலான போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் சென்னை மெரினாவில் நடந்து கொண்டு இருக்கும்போதே, மெரினாவில் கூடியவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை 23ஆம் தேதி அதிகாலை அறிவித்தனர். அறிவிப்பைத் தொடர்ந்து எங்களது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர். போலீசாரின் கையில் தடி இல்லை, அவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வரவில்லை என்று பலவாறு கூறினாலும், அன்று நடந்தது அனைத்தும் தவறான அரசின் நடவடிக்கையாகத் தான் பார்க்க தோன்றியது.
காவல்துறையும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் வருகிறது. அரசின் கையசைவு இல்லாமல் எந்த முடிவையும் காவல்துறை எடுக்க முடியாது. 6 நாட்கள் பொறுத்திருந்த தமிழக அரசால் ஏன் ஒரு நாள் பொறுக்க முடியவில்லை. காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடு நீக்கப்படும், ஜல்லிக்கட்டுக்கான சட்டம் அமலாகும், மெரினாவில் கூடிய கூட்டமும் கலைந்து சென்று இருக்கும்.
மெரினாவில் கூடியது ஆயிரக்கணக்கிலோ அல்லது நூற்றுக்கணக்கிலோ அல்ல. லட்சக்கணக்கில். அப்படி இருக்கும்போது, காவல்துறையின் நடவடிக்கை மிகவும் மோசமாகவே பார்க்கப்பட்டது. அன்று சமூக விரோதிகளின் கை ஓங்கியதா? இல்லையா? என்பதை விளக்க வேண்டியது அரசின் கடமை. காவல்துறையின் கடமை. பாதிக்கப்பட்டது நடுக்குப்பம் மீனவர்கள். தங்க இடம் இல்லாமல் தற்போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகளால் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதன் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம், இன்னும் அவர்களிடம் நிறைய ஆதங்கம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது.
மெரினா அமைதிப் போராட்டத்துக்குப் பின்னர் நடந்த வன்முறை தமிழக இளைஞர்களை மிகவும் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி மாணவர்களின் போராட்டத்தின்போது, கடல் தண்ணீருக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள இளைஞர்கள் துணிந்த சம்பவம் அவர்களை எந்தளவிற்கு அவர்களது கொள்கைகளில் உறுதிபடைத்தவர்களாக மாற்றியது என்பதை உணரலாம். தமிழக இளைஞர்கள் இன்று உலகிற்கே சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரையுள்ள மெரினாவில் எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்தது. இதற்கிடையே, மீண்டும் மெரினாவில் கூடி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதையடுத்து மெரினாவில் மீண்டும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Again heavy police protection in Marina
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும், சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் அமைதி வழியிலான போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் சென்னை மெரினாவில் நடந்து கொண்டு இருக்கும்போதே, மெரினாவில் கூடியவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை 23ஆம் தேதி அதிகாலை அறிவித்தனர். அறிவிப்பைத் தொடர்ந்து எங்களது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர். போலீசாரின் கையில் தடி இல்லை, அவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வரவில்லை என்று பலவாறு கூறினாலும், அன்று நடந்தது அனைத்தும் தவறான அரசின் நடவடிக்கையாகத் தான் பார்க்க தோன்றியது.
காவல்துறையும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் வருகிறது. அரசின் கையசைவு இல்லாமல் எந்த முடிவையும் காவல்துறை எடுக்க முடியாது. 6 நாட்கள் பொறுத்திருந்த தமிழக அரசால் ஏன் ஒரு நாள் பொறுக்க முடியவில்லை. காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடு நீக்கப்படும், ஜல்லிக்கட்டுக்கான சட்டம் அமலாகும், மெரினாவில் கூடிய கூட்டமும் கலைந்து சென்று இருக்கும்.
மெரினாவில் கூடியது ஆயிரக்கணக்கிலோ அல்லது நூற்றுக்கணக்கிலோ அல்ல. லட்சக்கணக்கில். அப்படி இருக்கும்போது, காவல்துறையின் நடவடிக்கை மிகவும் மோசமாகவே பார்க்கப்பட்டது. அன்று சமூக விரோதிகளின் கை ஓங்கியதா? இல்லையா? என்பதை விளக்க வேண்டியது அரசின் கடமை. காவல்துறையின் கடமை. பாதிக்கப்பட்டது நடுக்குப்பம் மீனவர்கள். தங்க இடம் இல்லாமல் தற்போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகளால் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதன் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம், இன்னும் அவர்களிடம் நிறைய ஆதங்கம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது.
மெரினா அமைதிப் போராட்டத்துக்குப் பின்னர் நடந்த வன்முறை தமிழக இளைஞர்களை மிகவும் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி மாணவர்களின் போராட்டத்தின்போது, கடல் தண்ணீருக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள இளைஞர்கள் துணிந்த சம்பவம் அவர்களை எந்தளவிற்கு அவர்களது கொள்கைகளில் உறுதிபடைத்தவர்களாக மாற்றியது என்பதை உணரலாம். தமிழக இளைஞர்கள் இன்று உலகிற்கே சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரையுள்ள மெரினாவில் எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்தது. இதற்கிடையே, மீண்டும் மெரினாவில் கூடி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதையடுத்து மெரினாவில் மீண்டும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Again heavy police protection in Marina