ஆப்நகரம்

வசதியற்ற 100 ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவமனை!

ஏழ்மையான சமூக பொருளாதார பின்புலத்தைச் சேர்ந்த வசதியற்ற 100 நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Jun 2019, 10:26 pm
கடந்த 1957ஆம் ஆண்டில் இருந்து, கண் பராமரிப்புச் சிகிச்சை துறையில் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இது சென்னையை அடுத்த அம்பத்தூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியுள்ளது.
Samayam Tamil Santhanam


இதன் தொடக்க விழாவில், வசதியற்ற 100 நபர்களுக்கு கட்டணமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் தொடக்கம் மட்டுமே.

கண் சிகிச்சையைப் பொறுத்தவரை வசதியற்ற மக்களுக்கு உதவ, பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கார்ப்பரேட் மற்றும் தொழில்துறைப் பிரிவுகளில் பணியாற்றுகிற பல தொழில்முறை பணியாளர்களின் தாயகமாக அம்பத்தூர் திகழ்கிறது. இங்கு ஒரு மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற தேவையை உணர்ந்து, அகர்வால் கண் மருத்துவமனை களமிறங்கி உள்ளது என்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் சந்தானம், அம்பத்தூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் இப்புதிய மருத்துவமனையை திறந்து வைப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்குகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி