ஆப்நகரம்

குரூப்- 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அரசாணை வெளியீடு

குரூப்- 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 11:38 am
குரூப்- 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil pic
குரூப்- 1 தேர்விற்கான வயது வரம்பை உயர்த்தியது தமிழ்நாடு தேர்வு ஆணையம்


கடந்த மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, டிஎஸ்பிஎஸ்சி தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 எனவும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 35ல் இருந்து 37-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பை தொடர்ந்து குரூப்- 1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்தி இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கான பிரிவில் துணை ஆட்சியர் போன்ற உயர் பதவிகளை அடைய குரூப்- 1 தேர்வு எழுதப்படுகிறது.

அடுத்த செய்தி