ஆப்நகரம்

கொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Samayam Tamil 1 Nov 2020, 3:52 pm
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த இரு வாரகாலமாக சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
Samayam Tamil doraikkannu


நேற்று (அக்டோபர் 31) இரவு 11.15 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்காக ஆறுதல் தெரிவிக்கச் சென்று கொண்டிருந்த அமைச்சர் ஆர்.துரைக்கண்ணுவிற்கு அக்டோபர் 13ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி: ஆன்லைன் வகுப்புகளுக்கு குட் பை..!

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் துரைக்கண்ணுவின் நுரையீரலில் தொற்று அதிகரித்தது. இதனால் உடல்நிலை கவலைக்கிடமானது. செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.இந்நிலையில் நேற்று இரவு 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்த துரைக்கண்ணுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.

தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றம்..! குடிமகன்கள் கவனத்திற்கு

அதிமுக தொடங்கப்பட்டபோதே அக்கட்சியில் சேர்ந்த துரைக்கண்ணு மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பாபநாசம் ஒன்றியத்தின் அதிமுக செயலராகவும் துரைக்கண்ணு பதவி வகித்துள்ளார்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்றுமுறையும் வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் வேளாண்துறை அமைச்சராகப் பதவிவகித்து வந்தார்.

அடுத்த செய்தி