ஆப்நகரம்

தீபாவளி: சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள்.. முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று இரவு சென்னையோல் இருந்து நெல்லைக்கு புறப்படவுள்ள ரயில் நேரம் பற்றிய விவரம்

Samayam Tamil 21 Oct 2022, 5:44 pm
தீபாவளியை முன்னிட்டு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யவிருப்பதால், தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துக்குள் இயக்கப்படும். இந்த நிலையில், சென்னை - திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Samayam Tamil diwali special train


இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும். இதன்படி, ரயில் எண். 06021- திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21, வியாழன் அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும்.

மீண்டும் ரயில் எண். 06022 - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு சென்னையை சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி காலை 8 மணி முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் (TNSTC) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும் (SETC) சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் 10,500 பேருந்துகளை ஒதுக்கியுள்ளன. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முதன்மைச் செயலர் கே.கோபால் ஆகியோர் தலைமையில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை 10,518 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9362 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மதுரை ஸ்பெஷல்... தீபாவளிக்கு டபுள் ஏற்பாடு- குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!

இந்த பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் MEPZ மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட நகரின் பல்வேறு பேருந்து முனையங்களில் இருந்து இயங்கும். கோயம்பேடு பேருந்து முனையத்தில் பேருந்துகள் பற்றிய தகவல் மற்றும் புகார்களைப் பெறுவதற்கு 24 மணி நேரமும் உதவி மையம் இருக்கும்.
இதுதவிர, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்து நடத்துநர்கள் குறித்த புகார்களைப் பெறுவதற்கு கட்டணமில்லா உதவி மையங்களை போக்குவரத்துத் துறை இயக்கும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதிக டிக்கெட் கட்டணம் குறித்த புகார்களை பெற கோயம்பேடு முனையத்தில் பிரத்யேக புகார் பிரிவு திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி