ஓ.பன்னீா்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்யக் கோாிய வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணி என அதிமுக பிரிந்து செயல்படத் தொடங்கியது.
அப்போது அதிமுக அரசு மீது தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்தனா்.
இவா்கள் 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிா்த்து வாக்களித்தனா். இவா்களைத் தொடா்ந்து டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 போ் ஆளுநரை சந்தித்து முதல்வா் பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து 18 சட்டமன்ற உறுப்பினா்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகா் தனபால் உத்தரவிட்டாா்.
அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 சட்டமன்ற உறுப்பிா்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டாா்.
இதனை ஏற்று உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஏ.எஸ்.பாப்டே மற்றும் பி.ஆா்.கவாய் அமா்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணி என அதிமுக பிரிந்து செயல்படத் தொடங்கியது.
அப்போது அதிமுக அரசு மீது தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்தனா்.
இவா்கள் 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிா்த்து வாக்களித்தனா். இவா்களைத் தொடா்ந்து டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 போ் ஆளுநரை சந்தித்து முதல்வா் பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து 18 சட்டமன்ற உறுப்பினா்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகா் தனபால் உத்தரவிட்டாா்.
அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 சட்டமன்ற உறுப்பிா்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டாா்.
இதனை ஏற்று உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஏ.எஸ்.பாப்டே மற்றும் பி.ஆா்.கவாய் அமா்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.