ஆப்நகரம்

ராணுவ வீரா்களின் தியாகத்தை சந்தேகிப்பதா? பியூஷ் கோயல் கேள்வி

பாஜக – அதிமுக – பாமக கூட்டணி புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 4 Mar 2019, 1:19 pm
நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரா்களின் தியாகத்தின் மீது சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம் போன்றோா் இப்படி பேசுவது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கண்டனம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil PIYUSH-GOYAL


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தாா். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு இராணுவத்தை கொச்சை படுத்தும் விதமாக ப.சிதம்பரம் போன்றோா் இப்படி பேசுவது கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசை நான் நம்பிவிட்டேன்; உலகம் நம்பவேண்டுமே? – ப.சிதம்பரம் கேள்வி

குறைசொல்வதன் மூலம் பாகிஸ்தான், அரசிற்கும் ஆதரவாக பேசுகிறார்கள்.காங்கிரஸ் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொண்ட அவர், நாடு தீவிரவாதத்தால் பல சவால்களை சந்தித்து வருகிறது. நல்ல முடிவெடுக்கும், நாட்டை பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக - பாமக ஆகியவை இணைந்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே. இந்த கூட்டணி புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்என்றார்.

அடுத்த செய்தி