ஆப்நகரம்

ஓபிஎஸ் இபிஎஸ் தேர்தல்: கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்ற உறுப்பினர்!

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி அதிமுக ஜெயச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

Samayam Tamil 6 Dec 2021, 11:03 am
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி அதிமுகவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
Samayam Tamil ops eps election


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனுக்களை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் வீட்டில் மற்றொரு அரசியல் வாரிசா? அடுத்து என்ன?ஆனால் அங்கு சென்று வேட்பு மனு கேட்டவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி அலுவலகத்தைவிட்டு வெளியே தள்ளினர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் அந்தப் பதவியைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
EXCLUSIVE ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த மார்க் இதுதான்: TOI சமயம் தமிழ் கள ஆய்வு!
நாளை தேர்தல் என்பதால் அதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் ஜெயச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் முறையீடு செய்தார்.

ஆனால் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, மனுவே தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மனுத்தாக்கல் செய்து, பதிவுத்துறை நடைமுறைகள் முடிந்தால் விசாரிகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி