ஆப்நகரம்

ஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக!

தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 24 Jan 2020, 1:34 pm
கம்பம் அருகே அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil aiadmk cadres road block for mp raveendranath kumar car glass broken in theni
ஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக!


அதிமுக ஆதரவு

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அதிமுக தனது ஆதரவை தெரிவித்தது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தவர் எம்.பியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆவார்.

இஸ்லாமியர்கள் அதிருப்தி

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே ஆளும் அதிமுக மீது இஸ்லாமியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இஸ்லாமியர்கள் கருப்புக்கொடி

இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக எம்.பி ரவீந்திரநாத் குமார் சென்றிருந்தார். அப்போது கம்பம் அருகே ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கருப்புக் கொடி காட்ட முயற்சித்தன.

கார் கண்ணாடி உடைப்பு

இந்த சூழலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி தேவதானப்பட்டி தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டனர்.

அதிமுக ஷாக்

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கையை கூறி கோஷமிட்டனர். இதைக் கண்டித்து அதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முதல் கம்பம் பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி