ஆப்நகரம்

அதிமுக கொடுத்த புகார்: ஆ.ராசா மீது வழக்கு பதிவு!

முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2020, 1:57 pm
அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil a raja


முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்" என விமர்சித்துப் பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். "2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன்” என சவால் விடுத்தார்.

சான்ஸ் கிடைச்சும் விஜய்யை சந்திக்காத விஜே சித்ரா: ஏன் தெரியுமா?

அதன்பின் அதிமுக, திமுக இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்துப் பேசினர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி காட்டமாக பேசினர். ஆ.ராசா கை வெட்டப்படும் என கடம்பூர் ராஜு பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஜேந்திர பாலாஜியும் தனது பாணியில் காட்டமாக பேசினார். அதோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ. ராசா மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.

சசிகலா ஒரு பக்கம், ரஜினி மறு பக்கம் : ஓபிஎஸ் நடத்தும் சைலன்ட் தர்ம யுத்தம்!

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி