ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: ரேஸில் இணைந்த அதிமுக, தேமுதிக

அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

Samayam Tamil 15 Nov 2019, 8:11 am
உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லையெனினும் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
Samayam Tamil உள்ளாட்சித் தேர்தல்


திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு நேற்று முதல் அக்கட்சியினரால் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகங்களில் இந்த மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தந்தையை பின் தொடர்வாரா உதயநிதி? சென்னை மேயர் பராக் பராக்!

இந்நிலையில் இன்று (நவம்பர் 15) முதல் அதிமுக, தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு இன்று விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. மாவட்ட தலைமை அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் இந்த மனுவை பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணிக்குள் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 25ஆம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வழங்கலாம்.

அசத்தும் தேமுதிக - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தேதி அறிவித்த விஜயகாந்த்!

திமுக சார்பில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 50,000 ரூபாய் கட்டி விருப்பமனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு 25,000 ரூபாயும், தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு 15,000 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. இதே போல் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகர் மன்றத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி