ஆப்நகரம்

என்ன கமல் பொசுக்குனு இப்படி பேசிட்டீங்க- கோபத்தில் கொதித்த அதிமுக, திமுக!

கல்லூரி விழா ஒன்றில் கமல் ஹாசன் பேசிய பேச்சு அதிமுக, திமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 3 Oct 2019, 2:23 pm
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கமல் ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இளம் தலைமுறையினர் அரசியல் பேச வேண்டும்.
Samayam Tamil Kamal Haasan


கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைதியாக இருக்கக் கூடாது. மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால் தான், அரசியலில் கறை படிந்துள்ளது. கரை வேட்டி கட்டுபவர்கள் கறை படிந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்- ராமதாஸ் கொந்தளிப்பு!

இது அதிமுக, திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கமல் திடீரென கருத்து கூறுவார். அப்புறம் காணாமல் போய் விடுவார்.

தேர்தல் நேரத்தில் அவரைப் பார்க்கலாம். அப்புறம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தான் பார்க்க முடியும். அந்த நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு.

இசையில் தொடங்குதம்மா.... திருமூர்த்தி என்னும் புதிய இசைவரவு

வசூல் ராஜா திரைப்படம் மூலம் ஆள் மாறாட்டத்தை தொடங்கி வைத்தார் என்று கடுமையாக சாடியுள்ளார். இதேபோல் திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், திடீரென வந்து அரசியலில் புதிய கருத்துகளைக் கூறுபவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

திமுக என்ற இயக்கமும், கரை வேட்டி கட்டிய கலைஞரும் உருவாக்கிய பெருமையால் தான் தமிழகம் உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே அரசியல் தெரிந்தவர்களுக்கு தான் கரை வேட்டியின் அருமை புரியும். கமல் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு!

அடுத்த செய்தி