ஆப்நகரம்

ஜெ., உடல்நிலையால் அடிதடி: மருத்துவமனையில் திமுக-அதிமுக பிரமுகர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்த போது, கைகலப்பாகி, அடிதடியில் முடிந்ததால் அதிமுக - திமுக பிரமுகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TNN 17 Oct 2016, 5:57 pm
கோவை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்த போது, கைகலப்பாகி, அடிதடியில் முடிந்ததால் அதிமுக - திமுக பிரமுகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil aiadmk dmk workers hospitalised after fight over cms health condition
ஜெ., உடல்நிலையால் அடிதடி: மருத்துவமனையில் திமுக-அதிமுக பிரமுகர்கள்


கடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என #ApolloHospitals அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், முதல்வரின் #Jayalalitha உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது.

இந்நிலையில், கோவையில் திமுக தொண்டர் லிங்கதுரை என்பவர், மது அருந்தி விட்டு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விமர்சித்துள்ளதாக தெரிகிறது. அப்போது, அவ்வழியே வந்த அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜ், லிங்கதுரையின் பேச்சால் ஆத்திரமைடைந்துள்ளார். தொடர்ந்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்கதுரை, அதிமுக கவுன்சிலர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுன்சிலரோ, லிங்கதுரை தன்னை தாக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

AIADMK-DMK workers hospitalised after fight over CM's health condition #JayaHealth

அடுத்த செய்தி